கிருஷ்ணகிரி, மே 19: கர்நாடகா மாநிலம். தும்கூர் வினோபா நகரை சேர்ந்தவர் மாதேஷ் (45). இவர் கிருஷ்ணகிரி குப்பன்னா தெருவில் உள்ள தனது சகோதரி வீட்டில், தங்கியிருந்து டயர் ரீடேங்கில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 19ம் தேதி தும்கூர் செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி அவரது மகள் லக்கிதா டவுன் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழிலாளி மாயம்
0