களக்காடு,அக்.21: களக்காடு அருகே மாவடி, உடையடிதட்டை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ராஜேந்திரன் (39). தொழிலாளியான இவர் சம்பவத்தன்று டோனாவூர் அருகே உள்ள காந்திபுரத்தில் நடந்த காளிபூஜையில் கலந்து கொள்ள தனது பைக்கில் சென்றார். பைக்கை தசரா குழு பிறை அருகே நிறுத்தி விட்டு, காளிபூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் வந்து பார்த்த போது பைக்கை காணவில்லை. பைக்கை மர்ம நபர் திருடி சென்றதை அறிந்த அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து திருக்குறுங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து தொழிலாளி பைக்கை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.