திருப்பூர், மார்ச் 20: திருப்பூர், ஊத்துக்குளி, செங்கப்பள்ளி அடுத்த முத்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (43). இவர், பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். மது போதைக்கு அடிமையான செல்வக்குமாருக்கு அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால், செல்வக்குமாரின் மனைவி சந்திரமதி கோபித்துக்கொண்டு தனது மகனுடன் வேறு இடத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். இதனால் மன அழுத்ததில் அவர் கடந்த 8ம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றஅவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தொழிலாளி தற்கொலை
0
previous post