Monday, June 16, 2025
Home மாவட்டம்சேலம் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட நபர் கைது

தொடர் கொள்ளையில் ஈடுபட்ட நபர் கைது

by Francis

 

தம்மம்பட்டி, மே 28: சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே செங்காடு பகுதியைச் சேர்ந்த பழனிமுத்து என்பவர் வீட்டில், கடந்த 19ம் தேதி இரவு, பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம கும்பல், பீரோவில் இருந்த 17பவுன் நகை, ₹70 ஆயிரத்தை திருடி சென்றனர். இது குறித்து, பழனிமுத்து தம்மம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த நிலையில், ஆத்தூர் எம்ஜிஆர் நகர் விநாயகர்புரத்தை சேர்ந்த பெருமாள் மகன் தேவா(35) என்பவர், இந்த கொள்ளையில் ஈடுபட்டது போலீசாருக்கு தெரியவந்தது.

இதனையடுத்து, அங்கு விரைந்த போலீசார், தேவாவை நேற்று கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், தனியாக இருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து திருடுவதை, அவர் வழக்கமாக கொண்டிருந்தது தெரியவந்தது. மேலும், வாழப்பாடி, மங்களபுரம், கள்ளக்குறிச்சி, கச்சிராபாளையம், ஆத்தூர் போன்ற பகுதிகளில் வீடு புகுந்து நகை மற்றும் பணத்தை திருடியதையும் அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவரிடம் இருந்து 50பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi