புதுக்கடை, செப்.1: தேங்காப்பட்டணம் பீச்ரோடு பகுதியை சேர்ந்தவர் ஷேக் முகமது. அவரது மகன் ஈசா (23). டிரைவர். சம்பவத்தன்று வேலைக்கு செல்லும் போது தனது பைக்கில் தேங்காப்பட்டணம் ஆற்றுப்பள்ளி தெருவில் நிறுத்திவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. யாரோ மர்ம நபர்கள் பைக்கை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து ஈசா புதுக்கடை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.