தர்மபுரி, ஏப்.22: மொரப்பூர் அண்ணல்நகர் பகுதியை சேர்ந்தவர் ஆண்டியப்பன் மகன் கிஷோர்குமார்(25). இவர் டிப்ளமோ படித்து விட்டு ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், விடுமுறையையொட்டி கடந்த 18ம் தேதி, கிஷோர்குமார் வீட்டுக்கு வந்திருந்தார். கடந்த 19ம்தேதி, அவர் ஆர்.எஸ்.தொட்டம்பட்டியில் உள்ள தென்பெண்ணையாற்றில் குளிப்பதற்காக சென்றார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற அவர் நீரில் மூழ்கினார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், சம்பவ இடம் வந்த தீயணைப்பு துறையினர், ஆற்றில் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் இரவு நேரமானதால் தேடும் பணி கைவிடப்பட்டது. நேற்று முன்தினம் ஆற்றில் அவரது சடலம் மிதந்தது. இதுபற்றி தகவலறிந்த மொரப்பூர் போலீசார் அவரது சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்பெண்ணையாற்றில் மூழ்கிய வாலிபர் பலி
0