தென்காசி,அக்.17: தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் செங்கோட்டை அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை மேலாளர் சீனிவாசன் தலைமையில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில் அரசு விரைவு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் தனியார் பேருந்து பணியாளர் உள்ளிட்ட அனைவருக்கும் விளக்கப்பட்டது. அரசு பணிமனை பணியாளர் ஈஸ்வரி மற்றும் தக்ஷிணாமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.