Wednesday, December 6, 2023
Home » துறையூர் அருகே 2 வீடுகளில் நகை, பணம் திருட்டு

துறையூர் அருகே 2 வீடுகளில் நகை, பணம் திருட்டு

by Dhanush Kumar

துறையூர்: துறையூர் அருகே அடுத்தடுத்த இரண்டு வீடுகளில் பணம், வெள்ளி நகை ஆகியவற்றை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். துறையூர் அருகே வேங்கடத்தனூர் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் பரமேஸ்வரி (41). இவர் (21ம் தேதி) இரவு தனது வீட்டை பூட்டிவிட்டு விவசாய நிலத்தில் உள்ள காட்டு கொட்டகையில் தங்கினார். மறுநாள் காலை பக்கத்து வீட்டில் வசிப்போர், பரமேஸ்வரியின் வீடு திறந்து கிடப்பதாக தகவல் தந்தனர். பரமேஸ்வரி சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த சுமார் 100 கிராம் எடையுள்ள பிரேஸ்லெட் உள்ளிட்ட வெள்ளி பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.மேலும் அதே தெருவில் வசிக்கும் ஆர்த்தி (45), தனது வீட்டினை பூட்டிவிட்டு, தனது குழந்தைகளுடன் மாடியில் தூங்கினார். மறுநாள் காலையில் பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டின் மறைவான பகுதியில் வைக்கப்பட்டிருந்த ரூ.7,500 பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.இதுகுறித்து பரமேஸ்வரி, ஆர்த்தி இருவரும் துறையூர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். ஒரே தெருவில் அடுத்தடுத்து இரு வீடுகளின் பூட்டு உடைத்து நகை, பணம் திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?