திருவாடானை: திருவாடானை மற்றும் நகரிகாத்தான் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிக்கு மின்விநியோகம் இருக்காது. மின்தடை பகுதி: திருவாடானை துணை மின் நிலையம் மற்றும் நகரிகாத்தான் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளான திருவாடானை, சி.கே.மங்கலம், பாண்டுகுடி, நகரிகாத்தான், வெள்ளையபுரம், மங்கலக்குடி, அஞ்சுகோட்டை,
குஞ்சங்குளம், வாணியேந்தல், கோடனூர், எட்டுகுடி, மல்லனூர், ஆண்டாஊரணி, ஓரியூர், சிறுகம்பையூர், அரசூர், டி.நாகனி, ஓரிக்கோட்டை, செவ்வாய்பேட்டை, புளியால், செலுகை, கல்லூர், திருவிடைமதியூர் பதனக்குடி மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என திருவாடானை உதவி செயற்பொறியாளர் சித்தி விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.