திருச்சி: திருச்சி மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கத்தில், சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாநகர மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, கதிரவன், ஸ்டாலின் குமார் ஆகியோர் பங்கேற்று குத்துவிளக்கேற்றி இவ்விழாவை தொடங்கி வைத்தார்கள்.