திருச்செங்கோடு, நவ.15: திருச்செங்கோட்டில் திமுக நகர செயலாளராகவும், நகர்மன்ற உறுப்பினராகவும், தலைமைக்கழக பேச்சாளராகவும், நகர அவைத்தலைவராகவும் இருந்தவர் முரசொலி முத்து. இவர் உடல்நல குறைவால் சென்னை அரசு மருத்துவமனையில் காலமானார். நேற்று வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் ஆகியோர் முரசொலிமுத்து வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.