Tuesday, July 8, 2025
Home மாவட்டம்திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டத்தில் லஞ்சம் குறித்த புகார்களை தொலைபேசியில் தெரிவிக்கலாம்

திண்டுக்கல் மாவட்டத்தில் லஞ்சம் குறித்த புகார்களை தொலைபேசியில் தெரிவிக்கலாம்

by Karthik Yash

திண்டுக்கல், ஜூலை 26: திண்டுக்கல் மாவட்டத்தில் ஊழல் மற்றும் லஞ்சம் குறித்த புகார்கள் தொலைபேசியில் தெரிவிக்கலாம் என டிஎஸ்பி நாகராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் ஊழல் மற்றும் லஞ்சம் குறித்த புகார்களை தெரிவிக்க தொலைபேசி மற்றும் செல்போன் எண்கள் ஊழல் மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில், சட்டபூர்வ கோரிக்கைகள் நிறைவேற்ற அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்டாலும், அரசின் நலத்திட்டங்களின் அதன் பலன்களை தகுதியற்றவர்களுக்கு கொடுத்து முறைகேடு செய்தாலும், அரசாங்க நிதியை பயன்படுத்தி ஊழல் செய்தாலும், அரசு அலுவலர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாலும் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்கலாம். அதன்படி திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பியின் 94981 45647 என்ற அலைபேசி எண்ணிலும், 0451 2461828 என்ற அலுவலக எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi