திண்டுக்கல், ஜூன் 10: திண்டுக்கல் அருகே அனுமந்தநகர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (40). கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி சாந்தி (35) என்ற மனைவியும், ரூபன் (15), ஹர்ஷினி ராஜ் (11) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இவர் நேற்று முன் தினம் அந்த பகுதியில் உள்ள துலுக்கன் குளத்திற்கு மீன் பிடிக்க சென்றார். அப்போது அவர் ஆழமான இடத்துக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் தண்ணீரில் அவர் மூழ்கியுள்ளார். அங்கிருந்தவர்கள் இதைப்பார்த்து உடனடியாக ஆரோக்கியசாமியை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வனராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.