திண்டுக்கல், பிப். 22: திண்டுக்கல் அருகே ஐடி ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.திண்டுக்கல் அருகே பாலகிருஷ்ணாபுரம் ராஜீவ் நகரை சேர்ந்தவர் கிரண் (33). சென்னை ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இன்னும் திருமணமாகவில்லை. கிரண் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் வேலைக்கு செல்லாமல் அவரது வீட்டில் தங்கி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டில் தூங்கிய கிரண் நேற்று காலையில் பார்த்த போது பேச்சு மூச்சு இன்றி மயக்க நிலையில் கிடந்தார். உடனே குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் கிரண் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரில் திண்டுக்கல் தாலுகா எஸ்ஐ அங்கமுத்து, ஏட்டு நல்லுசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.