ஊட்டி, ஜூன் 20: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள பல்வேறு வகையான ஆர்கிட் மலர்களை வியப்புடன் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கின்றனர்.
நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் தாவரவியல் பூங்காவுக்கு செல்கின்றனர். இங்கு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்கா முழுவதிலும் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதில் மலர்கள் பூத்துக் காணப்படும்.
இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். இது தவிர பூங்காவில் உள்ள மாடங்களிலும் அவ்வப்போது மலர் தொட்டிகளை கொண்டு மலர் அலங்காரங்கள் மேற்கொள்ளப்படும். இதனையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வார்கள்.