Saturday, May 17, 2025
Home மாவட்டம்திருவண்ணாமலை தாத்தா பாலியல் தொல்லை: சிறுமி தற்கொலை 7 மாதங்களுக்கு பிறகு போக்சோ சட்டத்தில் கைது வந்தவாசி அருகே

தாத்தா பாலியல் தொல்லை: சிறுமி தற்கொலை 7 மாதங்களுக்கு பிறகு போக்சோ சட்டத்தில் கைது வந்தவாசி அருகே

by Karthik Yash

வந்தவாசி, மே 6: தாத்தா பாலியல் தொல்லை கொடுத்ததால் சிறுமி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக 7 மாதங்களுக்கு பிறகு ேபாக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் அமரேசன். இவரது மனைவி அஞ்சலை (33). இவர்களுக்கு 17, 14 வயதில் 2 மகள்கள் உள்ளனர். அமரேசன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். இதனால் அஞ்சலை அதே கிராமத்தை சேர்ந்த ஏழுமலை(27) என்பவரை 2வதாக திருமணம் செய்துகொண்டாராம். இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகள் உள்ளார். தம்பதி இருவரும் செங்கல்பட்டு மாவட்டம் அத்திவாக்கம் பகுதியில் உள்ள ரைஸ்மில்லில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். இதனால் 3 மகள்களும் அஞ்சலையின் பெற்றோர் பராமரிப்பில் உள்ளனர். அங்குள்ள உயர்நிலைப்பள்ளியில் 3பேரும் படித்தனர். இதில் 14 வயது சிறுமி கடந்த அக்ேடாபர் 14ம் தேதி பள்ளிக்கு சென்று வீடு திரும்பினார். அப்போது அவர் தனது அக்காவிடம் விவசாயத்திற்கு பயன்படுத்தும் மருந்து சாப்பிட்டு விட்டதாக கூறியபடி மயங்கி விழுந்து சிறிது நேரத்தில் இறந்துள்ளார்.

இதுகுறித்து போலீசாருக்கு தெரிவிக்காமல் உறவினர்கள் அங்குள்ள ஏரிக்கரையில் சடலத்தை புதைத்துள்ளனர். இதுகுறித்து தெள்ளாரில் உள்ள தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஒருவர், திருவண்ணாமலை எஸ்பி, பழங்குடியினர் ஆணையம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு மனு அளித்தார். அதில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால் விஷம் குடித்து இறந்தார் என தெரிவித்திருந்தார். அதன்பேரில் தெள்ளார் போலீசார் வழக்கு பதிவு செய்து கடந்த மாதம் 18ம்தேதி வருவாய் துறையினர் முன்னிலையில் சிறுமியின் உடலை தோண்டி எடுத்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனை டாக்டர்கள் 3 பேர் கொண்ட குழுவினர் அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ஏழுமலையின் தந்தை தேசிங்கு(59) என்பவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததால் சிறுமி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேசிங்குவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi