அவிநாசி, மே 20: அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 40வது ஆண்டு அமைப்பு தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு சங்க கொடியேற்றி வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினர். இதில், ஒன்றிய செயலாளர் சுமதி, ஒன்றிய தலைவர் ஜோதி, ஒன்றிய இணை செயலாளர் ஜெய, மாவட்ட தலைவர் விஜயலட்சுமி, ஒன்றிய பொருளாளர் ரேவதி, ஒன்றிய துணை தலைவர் பாபி மோகன், மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரகலா, சரிதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் அமைப்பு தின விழா
0