கிணத்துக்கடவு, மார்ச்1: கிணத்துக்கடவு அருகே உள்ள பாலார்பதியை சேர்ந்தவர் ரகுபதி(19), இவர் கடந்த இரண்டு மாதங்களாக,காட்டம்பட்டியை அடுத்து ஜக்கார்பாளையத்தில் உள்ள,ஒரு தனியார் தோட்டத்தில் தங்கி, கூலி வேலை செய்து,தோட்டத்தை பராமரித்து வந்தார். இந்நிலையில் நேற்று ரகுபதி வேலை செய்யும் தோட்டத்தில் உள்ள, தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரம்பி வெளியேறி கொண்டிருந்தது.
இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த சிலர், தண்ணீர் தொட்டி அருகே சென்று பார்த்த போது,ரகுபதியின் உடல், தண்ணீர் தொட்டியில் சடலமாக மிதந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தீயணைப்புத்துறை மற்றும் நெகமம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், ரகுபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரகுபதி தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து இறந்தாரா? முன் விரோதம் காரணமாக யாராவது தண்ணீர் தொட்டியில் தள்ளிவிட்டு கொலை செய்தனரா?என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.