Wednesday, June 18, 2025
Home மாவட்டம்தஞ்சாவூர் தஞ்சையில் 60 காவல் வாகனங்கள் பொது ஏலம்

தஞ்சையில் 60 காவல் வாகனங்கள் பொது ஏலம்

by Arun Kumar

 

தஞ்சாவூர், மே.28: தஞ்சாவூர் மாவட்ட காவல் துறையில் முதிரா மற்றும் முதிர்ந்த நிலையில் கழிவு செய்யப்பட்ட 60 காவல் வாகனங்களை பொது ஏலத்தில் ஏலமிட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம் உத்தாவிடப்பட்டுள்ளார்.இந்த பொது ஏலமானது வருகின்ற 04.06.2025 அன்று காலை 10.00-மணிக்கு தஞ்சாவூர் மாவட்டம் பழைய கோர்ட் ரோடு, ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. ஏலத்திற்குண்டான காவல் வாகனங்கள் மேற்படி ஆயுதப்படை மைதானத்தில் 02.06.2025 அன்று காலை 09.00-மணி முதல் ஏலம் நடைபெறும் நேரம் வரை பார்வைக்காக வைக்கப்படும். ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் ஆதார் அட்டை அசலுடன் நகல் ஒன்றை கொடுத்து 04.06.2025 அன்று காலை 07.00-மணி முதல் 10.00-மணி வரை ரூ.1000 ம் முன் வைப்பு தொகையாக செலுத்தி ஏலம் எடுக்க தங்கள் பெயர்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும் ஏலம் எடுத்தவர்கள், ஏலத்தொகையுடன் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ஏலத்தொகை மற்றும் GST (இருசக்கர வாகனம்-12%, நான்கு சக்கர வாகனம்-18%) வரியுடன் சேர்த்து 04.06.2025 அன்று உடனே செலுத்திவிட வேண்டும் இந்த அறிவிப்பின் முலம் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi