தஞ்சாவூர், மே 6: தஞ்சையை அடுத்த வரவுக்கோட்டை பகுதியில் பொங்கல் கரும்பு நடவு செய்வதற்கு விதைக் கரும்புகள் தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கரும்பு, வாழை, வெற்றிலை, வெள்ளரிக்காய், உளுந்து, எள், மக்காச்சோளம், பூக்கள் போன்றவையும் சாகு படி செய்யப்பட்டு வருகின்றன.
இது தவிர பொங்கல் கரும்பும் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.