ஒரத்தநாடு: ஒரத்தநாட்டில் திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர், ஒன்றிய பெருந்தலைவர், தலைமைக் கழக செயற்குழு உறுப்பினருமான மு.காந்தியின் 3ம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஒரத்தநாடு முன்னாள் எம்எல்ஏ எம்.ராமச்சந்திரன், ஒரத்தநாடு ஒன்றிய பெருந்தலைவர் பார்வதி சிவசங்கர், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மணவழகன், உள்ளூர் பட்டிக்காடு ஊராட்சி தலைவர் வெங்கடேஸ்வரன், முன்னாள் பொறியாளர் அணி செயலாளர் ரத்தினகுமார், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் மலர்மன்னன், ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர்கள், ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட பிரதிநிதிகள், மாவட்ட கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.