தஞ்சாவூர், ஏப்22: தஞ்சாவூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் 24ம் தேதி நடைபெற உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் கோட்டத்திற்கு உட்பட்ட கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 24ம் தேதி வியாழக்கிழமை அன்று முற்பகல் 10மணியளவில் தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே, தஞ்சாவூர் கோட்டத்திற்குட்பட்ட தஞ்சாவூர், திருவையாறு, பூதலூர் மற்றும் ஒரத்தநாடு வட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
அதேபோல் தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் கோட்டத்திற்கு உட்பட்ட கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 29ம் தேதி செவ்வாய்கிழமை அன்று முற்பகல் 10மணியளவில் தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே, தஞ்சாவூர் கோட்டத்திற்குட்பட்ட தஞ்சாவூர். திருவையாறு ஓரத்தநாடு மற்றும் பூதலூர் வட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் இக்கூட்ட த்தில் கலந்து கொண்டு பய ன்பெறும்படி தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா தெரிவித்துள்ளார்.