தூத்துக்குடி, ஏப். 22: வாகைக்குளம் சுங்கச்சாவடி கண்ணாடியை உடைத்து 2 ஊழியர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக 30 பேர் மீது புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடியில் சமுதாயத் தலைவர் ஒருவரின் பிறந்த நாள் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தங்கள் ஊர்களுக்கு வாகனங்களின் அன்றைய தினம் இரவு புறப்பட்டு சென்றனர். அப்போது வாகைக்குளம் சுங்கச் சாவடி வழியாக சென்றபோது, அவர்களுக்கும் அங்கிருந்த ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாகனத்தில் வந்தவர்கள் சிலர் சுங்கச்சாவடியின் கண்ணாடிகளை உடைத்ததுடன் அங்கிருந்த ஊழியர்களையும் தாக்கிவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதில் சுங்கச்சாவடி ஊழியர்கள் இருவர் காயமடைந்தனர். உடனடியாக காயமடைந்த இருவரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் புதுக்கோட்டை போலீசார், தூத்துக்குடியைச் சேர்ந்த இசக்கிராஜா உள்பட 30 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
டோல்கேட் கண்ணாடியை உடைத்து 2 ஊழியரை தாக்கிய 30 பேர் மீது வழக்கு
0