ராசிபுரம், ஏப்.26: வெண்ணந்தூர் ஒன்றியம் கோம்பைக்காடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி(65). கூலித்தொழிலாளி. இவரது பேத்தி லாவண்யா(16). பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், உறவினர் வீட்டில் பேத்தியை விட, ராமசாமி பேத்தி லாவண்யாவை அழைத்துக்கொண்டு டூவீலரில், கட்டனாச்சம்பட்டிக்கு சென்றுள்ளார். அப்போது கட்டனாச்சம்பட்டி நோக்கி எம்.சாண்ட் ஏற்றிவந்த டிப்பர் லாரி, ராமசாமியின் டூவீலர் மீது மோதியது. இதில் டூவீலரை ஓட்டிவந்த ராமசாமி பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பவைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ராமசாமி உயிரிழந்தார். அவரது பேத்தி லாவண்யா சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து ராசிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டூவீலர் மீது டிப்பர் லாரி மோதி தொழிலாளி பலி
0
previous post