சேலம், ஜூன் 19: சேலம் தாரமங்கலம் அடுத்த துட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மோகன் (29). இவர் நேற்று முன்தினம் இரவு, டூவீலரில் சின்னப்பம்பட்டியில் இருந்து துட்டம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது தாரமங்கலம் அருகே சென்ற போது, பின்னால் வந்த கார் இவரது டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுபற்றி தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டூவீலர் மீது கார் மோதி வாலிபர் பலி
0
previous post