திருச்சி, ஏப்.29: திருச்சியில் டூவீலர் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி ஜீவா நகர் பெரியார் தெருவை சேர்ந்தவர் ஹர்சத்துலாக்(27). இவர், கடந்த 25ம் தேதி இரவு பெரியார் தெரு பகுதியில் உள்ள கடையின் முன்பு டூவீலரை நிறுத்தினார். மறுநாள்(26ம் தேதி) காலை பார்த்த போது டூவீலர் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து, ெதன்னூர் சென்ட்ரல் பஜாரை சேர்ந்த இர்சத் பாபு(32) என்பவரை ைகது செய்தனர்.