கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம். பர்கூர் அங்கிநாயனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி செல்வி (60). இவர் மகன் சக்தியுடன் கடந்த 21ம் தேதி டூவீலரில் கிருஷ்ணகிரி- சென்னை தேசிய நெடுஞ்சாலை, அங்கிநாயனப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே சென்றுக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக டூவீலரில் இருந்து செல்வி தவறி விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்றுமுன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.