திருக்கோவிலூர், ஏப். 24:திருக்கோவிலூர் அடுத்த அப்பானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பலராமன் மகன் குப்பன் (31). டிராக்டர் ஓட்டுநர். இவர் உறவினர் ஏழுமலை டிராக்டரை எடுத்துக்கொண்டு விவசாயப் பணிகளை முடித்துவிட்டு நேற்று மாலை வீட்டிற்கு செல்ல அதே கிராமத்தை சேர்ந்த திருமுருகன் மகன் மோகன்(18), ஆறுமுகம் வெட்ரி(16) ஆகியோருடன் டிராக்டரில் திருக்கோவிலூர் -கண்டாச்சிபுரம் சாலையில் வந்தார். இதில் எதிர்பாராதவிதமாக விவசாய நிலத்தில் டிராக்டர் கவிழ்ந்தது. இதில் மோகன், வெட்ரி ஆகிய இருவரும் குதித்துவிட்டனர். குப்பன் டிராக்டரின் அடியில் சிக்கி கொண்டு சம்பவ இடத்திலே இறந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் காயம்பட்ட இருவரை மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அரகண்டநல்லூர் போலீசார் விரைந்து வந்து குப்பன் பிரேதத்தை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
டிராக்டர் கவிழ்ந்து ஓட்டுனர் பலி
0
previous post