ஜெயங்கொண்டம், மே 8: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பால் மதிப்பு கூட்டும் மூன்று நாள் பயிற்சி நடைபெற்றது.5, 6, 7 ஆகிய நாட்களில் 3 நாள் பயிற்சியாக, பால் மதிப்பு கூட்டும் பயிற்சி ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
பயிற்சியின் முடிவில் 30 பயனாளிகளுக்கும் சான்றிதழ், பயணப்படி, பை போன்றவற்றை மாவட்ட திட்ட மேலாளர் பிரவீன் வழங்கினார். வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) மகேந்திர வர்மன் மற்றும் மற்றும் கால்நடை மருத்துவர் பிரகாஷ் ஆகியோர் 30 பயனாளிகளுக்கும் பயிற்சியினை பயிற்றுவித்தனர்.