Friday, July 18, 2025
Home மாவட்டம்திருப்பூர் சோலார் மின் ஆற்றலை பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

சோலார் மின் ஆற்றலை பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

by Francis

 

பல்லடம், ஜூன் 26: சோலார் மின் ஆற்றலை பயன்படுத்த விவசாயிகளுக்கு மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து பல்லடம் மின்வாரிய செயற்பொறியாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பகலில் இலவசமாக கிடைக்கும் புதுப்பிக்கூடிய இயற்கை வளமான சூரிய மின் ஆற்றலை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் சூரிய ஒளி மின்சாரத்தை அதிகமாக பயன்படுத்துவதின் மூலம் பசுமை ஆற்றால் திட்டங்களை ஊக்குவிப்பதோடு மற்ற வளங்களை கொண்டு மின்னாற்றலை தயாரிக்கும் போது ஏற்படும் மாசுபாட்டு அளவை குறைக்கவும், நமது நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் நோக்கத்திலும், விவசாயிகள், பகல் நேரங்களில் கிடைக்கக்கூடிய சோலார் மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும். இயன்றவரை, தங்களது விவசாய நிலங்களில் உள்ள மின் மோட்டார்களை பகல் நேரங்களில் உபயோகிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi