நத்தம்: செந்துறை துணை மின்நிலையத்தில் இன்று (அக்.26ம் தேதி, வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செந்துறை, கருத்தநாயக்கன்பட்டி, பிள்ளையார்நத்தம், கோட்டைப்பட்டி, கோசுகுறிச்சி, குடகிப்பட்டி, மங்களப்பட்டி, மணக்காட்டூர், களத்துப்பட்டி, மாமரத்துப்பட்டி, மாதவநாயக்கன்பட்டி ஆகிய ஊர்களில் மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இத்தகவலை நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.