செய்முறை முதலில் கோழியை பெரிய துண்டுகளாக; வெட்டி சுத்தம்
செய்யவும். தேங்காய், முந்திரியை நைசாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில்
எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளிக்கவும். பிறகு
நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி,
பூண்டு விழுது, தக்காளி சேர்த்துக்கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி
வைக்கவும். தக்காளியையும் பொடியாக நறுக்கி வைக்கவும். மிளகாயை
இரண்டாகக் கிள்ளி வைக்கவும். தக்காளி கரையும் வரை நன்கு வதக்கவும். நல்ல
வாசனை வந்தவுடன் கோழிக்கறி சேர்த்து வதக்கவும். கோழிக்கறி நன்கு வதங்கிய
பின்னர் மிளகாய்த் தூள், மல்லித்தூள்,; சீரகத் தூள், சோம்புத்தூள், மஞ்சள்
தூள், உப்பு சேர்த்து வைக்கவும். ஒரு கப் தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும்.
கோழிக்கறி முக்கால் பதம் வெந்ததும் அரைத்து தேங்காய் விழுது சேர்த்து
நன்கு வேக விடவும் கோழிக்கறி முழுவதும் வெந்தபின் இறக்கவும்.
செட்டிநாடு சிக்கன்
116
previous post