Monday, May 29, 2023
Home » சூர்யா விலகிய நிலையில் வணங்கான் ஷூட்டிங்கை மீண்டும் தொடங்கும் பாலா

சூர்யா விலகிய நிலையில் வணங்கான் ஷூட்டிங்கை மீண்டும் தொடங்கும் பாலா

by kannappan

சென்னை: இயக்குனர் பாலா, சூர்யா நடிப்பில் ‘வணங்கான்’ படத்தை இயக்கினார். இரண்டு ஷெட்யூல் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், இந்தப் படத்தில் இருந்து திடீரென சூர்யா விலகினார். இதுபற்றி பாலா வெளியிட்ட அறிக்கையில், ‘வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி, ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு வருத்தம்தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது’ என்று கூறியிருந்தார்.இந்நிலையில் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு பதில் அருண் விஜய் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு வரும் 9ம் தேதி கன்னியாகுமரி அருகே நடக்க இருக்கிறது. இந்தப் படத்துக்கு முதலில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக ஒப்பந்தமாகி இருந்தார். இப்போது வேறு ஹீரோயினை தேடி வருகின்றனர். சூர்யா நடித்த காட்சிகளையும் கன்னியாகுமரியில்தான் பாலா படமாக்கினார். இப்போது அதே இடத்தில் அருண் விஜய்யை வைத்து அவர் காட்சிகளை இயக்க உள்ளார். இந்த படத்துக்கு தலைப்பையும் மாற்ற பாலா யோசித்து வருகிறாராம்….

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi