செய்முறை: முதலில் சப்பாத்திகளை துண்டுகளாக நறுக்கவும். வாணலியில்
எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருஞ்சீரகம், லவங்கம், பட்டை போட்டு
தாளிக்கவும். தொடர்ந்து பல்லாரி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து
நன்கு வதக்கவும். இத்துடன் தக்காளி, குடமிளகாய் சேர்த்து வதக்கவும்.
குடமிளகாய் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி, பெருஞ்சீரக
தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து
வதக்கவும். இவற்றுடன் நறுக்கிய சப்பாத்திகளை சேர்த்து நன்றாக பிரட்டவும்.
சப்பாத்தியுடன் மசாலா நன்கு சேர்ந்து வந்ததும், முட்டைகளை உடைத்து
ஊற்றவும். முட்டை வெந்து கலவையுடன் ஒன்றானதும், கறிவேப்பிலை சேர்த்து
பிரட்டி இறக்கவும். சுள் சுவையில் சில்லி கொத்து சப்பாத்தி ரெடி.
சில்லி கொத்து சப்பாத்தி
76
previous post