திருவாடானை, ஜூன் 8: திருச்சி உறையூரை சேர்ந்தவர் சாம்சன். இவர், திருவாடானை அருகே கூகுடி கிராமத்தில் அவரது சித்தப்பா ஜேம்ஸ் வீட்டில் தங்கி சிற்ப வேலைகளை பார்த்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த முத்துக்குமார் மகன் பிரேம்குமார்(32) என்பவர் சாம்சன் தங்கி இருக்கும் வீட்டிற்கு சென்று குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு சாம்சன் தன்னிடம் பணம் இல்லை எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரேம்குமார் கத்தியால் சாம்சனை குத்தினார். இதனால் மயக்கம் அடைந்த அவரை திருவாடானை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து சாம்சன் கொடுத்த புகாரின் பேரில், திருவாடானை போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேம்குமாரை கைது செய்தனர்.