கோவை, மே 28: கோவையை சேர்ந்தவர் நிஷார். இவர் ஒரு சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இது குறித்து கோவை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் (கிழக்கு) புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பெரில் போலீசார் கடந்த 7ம் தேதி நிஷாரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
இந்நிலையில் கோவை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய (கிழக்கு) இன்ஸ்பெக்டர் மற்றும் கோவை சரக போலீஸ் துணை கமிஷனர் பரிந்துரையின் பேரில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர், நிஷார் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன் பேரில் கோவை மத்திய சிறையில் இருக்கும் நிஷார் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதற்கான நகல் அவரிடம் வழங்கப்பட்டது.