Friday, September 22, 2023
Home » சித்தியுடன் கள்ளத்தொடர்பு கணவனை கத்தியால் குத்திய மனைவி: சிதம்பரத்தில் பரபரப்பு

சித்தியுடன் கள்ளத்தொடர்பு கணவனை கத்தியால் குத்திய மனைவி: சிதம்பரத்தில் பரபரப்பு

by Ranjith

 

சிதம்பரம், ஆக. 26: சிதம்பரத்தில் சித்தியுடன் கள்ளத்தொடர்பு வைத்த கணவனை மனைவி கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அப்பா பிள்ளை சந்துப் பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி மகன் சாமிநாதன் (37). இவர் சிதம்பரம் பகுதியில் உள்ள பாம்பன் சுவாமி கோயிலில் உதவியாளராக வேலை செய்து வருகிறார். இவருக்கு சுதா(31) என்ற பெண்ணுடன் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகிய நிலையிலும் இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் சுதாவின் சித்திக்கு கணவர் இல்லாத நிலையில், சாமிநாதன் சுதாவின் சித்தியுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதை மனைவி கண்டித்துள்ளார்.

இதில் கோபம் அடைந்த சுவாமிநாதன் மனைவியை கன்னத்தில் அறைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை மீண்டும் கணவனுக்கும், மனைவிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கே சென்ற சுதா காய்கறி அறியும் கத்தியால் கணவனை சுமார் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த சாமிநாதனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சாமிநாதன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து சுதாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் பக்கத்து தெருவில் உள்ள சித்தியுடன் சுவாமிநாதன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகவும், வீட்டிற்கு சாப்பிடுவதற்கும், தூங்குவதற்கும் மட்டும் வந்துள்ளார் என்றும், தன்னுடன் அவர் குடும்ப நடத்தவில்லை என்ற ஆத்திரத்தில் கத்தியால் குத்தியதாக சுதா தெரிவித்துள்ளார். சிதம்பரத்தில் கள்ளத்தொடர்பு விவகாரத்தில் கணவனை மனைவி கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?