உடுமலை, மார்ச் 21: உடுமலை அருகே பெதப்பம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது. இதன் அருகே சாலையோரம் பொதுமக்கள் குப்பை கொட்டிச் செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதுபற்றி பலமுறை அதிகாரிகளிடம் புகார் கூறியும் நடவடிக்கை இல்லை. குப்பை தொட்டி இல்லாததால் பொதுமக்கள் தரையில் கொட்டிச் செல்கின்றனர். கொசுக்கள் பெருகி துர்நாற்றம் வீசுகிறது.எனவே, குப்பைகளை உடனடியாக அகற்றி, குப்பை தொட்டி வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாலையோரம் குப்பைகள் கொட்டுவதால் சுகாதார கேடு
0