அரூர், ஜூன் 5: அரூர் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையில் போலீசார், சோதனை நடத்தினர். அப்போது, அரூர் கோட்டத்தில் கள்ளச்சாராயம், மதுபாட்டில் கள்ளத்தனமாக அதிக விலைக்கு விற்பனை செய்த வழக்கு மற்றும் ஓட்டல், பெட்டிக்கடையில் குடிக்க அனுமதித்த கடைக்காரர்கள் உள்பட அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர் ஆகிய பகுதிகளில் கடந்த மாதம் 16 பெண்கள் உள்பட 48பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 733 மதுபாட்டில்கள், 2 கிலோ கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சாராயம், மது விற்ற வழக்கில் 48 பேர் கைது
0
previous post