சமயபுரம்:திருச்சி அருகே நடந்த இரு சாலை விபத்தில் 2 பேர் பரிபாதமாக இறந்தனர். மண்ணச்சநல்லூர் வாத்தலை அருகே உள்ள ஆமூரை சேர்ந்த திருமலை (19). கொத்தனார். நேற்று முன்தினம் தனது டூவீலரில் முக்கொம்பு சாலை ஊசி பாலம் அருகே வந்தபோது, எதிர் வந்த மினி லாரி அவர் மீது மோதியது. இதில் திருமலை தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து விபத்தை கண்ட அக்கம்பக்கத்தினர் திருமலையை மீட்டு சிகிச்சைக்காக ரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் திருமலை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வாத்தலை போலீசார் விபத்தை ஏற்படுத்திய மினி லாரி டிரைவர் மணிகண்டன் மீது வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.