Thursday, July 10, 2025
Home மாவட்டம்நீலகிரி சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்

சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்

by Ranjith

 

கோவை, ஜூன் 14: கோவையில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை ரேஸ்கோர்ஸ் ரெட்பீல்ட்ஸ் காமராஜ் சாலையில் முன்னாள் துணை நீதிபதிகள் குடியிருப்பு உள்ளது. இங்கு 10க்கும் மேற்பட்ட சந்தன மரங்கள் உள்ளன. இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று முன்தினம் நீதிபதிகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைத்து அங்கிருந்த 5 சந்தன மரங்களை வெட்டி உள்ளனர். அதன் பின்னர் 4 சந்தன மரங்களை கடத்தி சென்றனர்.

ஒரு மரம் பெரியதாக இருந்ததால் அதனை அங்கேயே போட்டுவிட்டு சென்றது தெரியவந்தது. காலை அக்கம் பக்கத்தினர் சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தன மரத்தை வெட்டி கடத்திய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi