தஞ்சாவூர், ஜூன் 18: சத்தீஸ்கரில் இருந்து சரக்கு ரயிலில் தஞ்சைக்கு 2650 டன் புழுங்கல் அரிசி வந்தது.மத்திய தொகுப்பில் இருந்து பொது வினியோகத்திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு புழுங்கல் அரிசி, பச்சரிசி, கோதுமை போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. இவைகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் ரேஷன் கடைகள் மூலம் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்படும். இந்தநிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து சரக்கு ரெயிலில் 42 வேகன்களில் 2,650 டன் புழுங்கல் அரிசி தஞ்சை ரயில் நிலையத்திற்கு நேற்று வந்தது. பின்னர் இந்த அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சையில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பு வைக்கப்பட்டன. இந்த அரிசி மூட்டைகள் தேவைக்கு ஏற்ப சேமிப்பு கிடங்கில் இருந்து லாரிகள் மூலம் ரேஷன் கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும்.
சத்தீஸ்கரில் இருந்து சரக்கு ரயிலில் தஞ்சைக்கு 2650 டன் புழுங்கல் அரிசி வந்தது
0
previous post