ஈரோடு, ஏப்.29: சட்டவிரோத மது விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதனடிப்படையில், கவுந்தப்பாடி, ஈரோடு வடக்கு மற்றும் பர்கூர் போலீசார் நேற்று முன்தினம் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அரசு மது பாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த கவுந்தப்பாடி, காந்திபுரத்தை சேர்ந்த கார்த்திக் ராஜா (38), ஈரோடு, வீரப்பன் சத்திரம், கங்கை வீதியை சேர்ந்த ஏகாம்பரம் (67), சேனாபதிபாளையத்தை சித்தேஸ்வரன் (66) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்த 44 மதுபாட்டில்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
சட்டவிரோத மது விற்பனை; 3 பேர் கைது
0