நித்திரவிளை, ஜூன் 28: கொல்லங்கோடு நகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்தும், லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டும், கொல்லங்கோடு நகராட்சியில் பல மடங்காக உயர்த்தப்பட்டுள்ள வரிகளை குறைத்திட கேட்டும், மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் நடத்தும் வாழ்வாதார கோரிக்கை மாநாட்டின் முன்னோடியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கொல்லங்கோடு வட்டார குழு சார்பில் மக்கள் சந்திப்பு நடை பயணம் கண்ணநாகம் சந்திப்பில் இருந்து துவங்கியது.
வட்டாரச் செயலாளர் அஜித்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜயமோகனன் துவக்கி வைத்து பேசினார். இந்த நிகழ்ச்சிக்கு வட்டாரக்குழு உறுப்பினர்கள் சுனில் குமார், சனல்குமார், அஜித்குமார், கிறிஸ்துதாஸ், சுந்தர்ராஜ், மேரி தாசன், பிராங்கிளின், சுரேஷ், ஸ்டீபன், மஞ்சு, ஷிபிலா, சரோஜினி, வாலிபர் சங்கம் வட்டாரச் செயலாளர் ரமேஷ் மற்றும் கிளை செயலாளர்கள், ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.