திருச்சி, மே.8: அரிவாளை காட்டி வாலிபரை மிரட்டியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சி, சிந்தாமணி, வெள்ளாலர்தெருவை சேர்ந்தவர் ஆல்பர்ட் செசில் ராஜ் (20). மே.5ம் தேதி கலைஞர் அறிவாலயம் அருகே உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் இவரை தாக்கி, ரூ.ஆயிரம் பணம் கேட்டு அரிவாளை காட்டி மிரட்டியுள்ளார். இதுகுறித்து ஆல்பர்ட் அளித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிந்து மேல சிந்தாமணி, கொசமேட்டு தெருவை சேர்ந்த கார்த்திக் (36) என்ற வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.