ஈரோடு, ஜூலை 2: ஈரோடு மாவட்டம் கொடுமுடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(3ம் தேதி) நடைபெற உள்ளது. இதனால், கொடுமுடி, சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசாம்பாளையம், பிலிக்கல்பாளையம், தளுவம்பாளையம், வடக்கு மூர்த்திபாளையம், அரசம்பாளையம், சோளக்காளிபாளையம், நாகமநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெற்கு மின் விநியோக செயற்பொறியாளர்(பொ) ரகுராமன் தெரிவித்துள்ளார்.