வருசநாடு, மே 5: வருசநாடு உள்ளிட்ட மலைக்கிராம பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொசு தொந்தரவு அதிகரித்துள்ளது. பகல் நேரங்களிலேயே அதிகளவிலான கொசுக்கள் கடிக்கின்றன. தற்போது டெங்கு காய்ச்சல் சீசன் காலம் என்பதால் பொதுமக்கள் பெரும் பீதிக்குள்ளாகி உள்ளனர். எனவே ஒன்றிய நிர்வாகம் நாள்தோறும் சுழற்சி முறையில் வீடுகள், தெருக்கள், கழிவுநீர் கால்வாய்களில் கொசு மருந்து அடிக்க வேண்டும்.
மேலும், சுகாதார பணியாளர்கள் மூலம் வீடுகளில் தண்ணீர் தேங்கும் வகையில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். குடியிருப்புகளின் அருகிலுள்ள மாட்டு தொழுவங்கள் உரிய சுகாதாரத்துடன் பராமரிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் உள்ள புதர்களை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.