திருச்செங்கோடு, மே 27: வையப்பமலை கொங்கணசித்தர் குகையில், அமாவாசை சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தன. வையப்பமலை குன்றின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கொங்கணசித்தர் தவம் செய்த குகையில் நேற்று, வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு பால், தயிர், இளநீர், பன்னீர், திருநீறு, திருமஞ்சனம், சந்தனம், கரும்புசாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிசேகம் மற்றும் ஆராதனை நடந்தது. நாகர்பாளையம், மரப்பரை, மின்னாம்பள்ளி, செக்காரப்பட்டி, குப்பிச்சிபாளையம், குஞ்சாம்பாளையம், சின்னமணலி, பெரியமணலி, மல்லசமுத்திரம், எலச்சிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பெண்கள் தீபமேற்றி வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.