Monday, June 16, 2025
Home மாவட்டம்கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு நீர்வரத்து 350 கனஅடி

கேஆர்பி அணைக்கு நீர்வரத்து 350 கனஅடி

by Karthik Yash

கிருஷ்ணகிரி, ஜூன் 11: கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): பெணுகொண்டாபுரம்- 16.2, போச்சம்பள்ளி- 8.5, கேஆர்பி டேம்- 6.6 என மொத்தம் 31.3 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு, நேற்று முன்தினம் 483 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 383 கனஅடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 324 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் மொத்த உயரமான 44.28 அடியில், தற்போது 41.16 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு நேற்று முன்தினம் 397 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 350 கனஅடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 111 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் மொத்த உயரமான 52 அடியில், தற்போது 45.15 அடிக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi