கெங்கவல்லி, ஜூன் 27: கெங்கவல்லி அருகே 74.கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள ஏரியில், அரசு அனுமதியின்றி ஆற்று மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில், எஸ்ஐ கணேஷ்குமார் தலைமையில் போலீசார், ஏரி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கிருந்த நபர்கள், போலீசாரை கண்டவுடன், பொக்லைன் வாகனத்தை எடுத்துக் தப்பிச்சென்றனர். மேலும் மணலுடன், டிராக்டரை விட்டு விட்டு சென்றனர். போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து, கெங்கவல்லி போலீஸ் ஸ்டேஷனுக்கு ெகாண்டு சென்றனர். மேலும், தப்பியோடிய டிராக்டர் டிரைவர் சண்முகம், உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.